search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோமநாத சுவாமி"

    • 8-வது திருநாள் காலையில் நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
    • நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் பூஞ்சப்பர பவனியும், மதியம் தீர்த்தவாரி அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெறுகின்றன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலின் ஆனி உத்திர திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழா நாட்களில் தினசரி காலையிலும் இரவிலும் சப்பரபவனி, கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

    நேற்று 8-வது திருநாள் காலையில் நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து ஸ்ரீ நடராஜர் வெண்பட்டு உடுத்தி வெள்ளை சாதி சப்பரபவனி நடந்தது.

    இரவில் ஸ்ரீ நடராஜர் சிவகாமி அம்பாளுடன் பச்சை பட்டாடை உடுத்தி வில்வம், மரிக்கொழுந்து மற்றும் பச்சை இலை மாலை அணிந்து ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூபமாக பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    9-வது நாளான இன்று காலையில் பூஞ்சப்பர பவனி நடைபெற்றது. இரவில் பஞ்சமூர்த்திகளின் சப்பர பவனி நடைபெறுகிறது. நிறைவு நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் பூஞ்சப்பர பவனியும், மதியம் தீர்த்தவாரி அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெறுகின்றன.

    இரவில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழு ந்தருளி முக்கிய தெருக்களின் வழியாக வீதி உலா நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பூஜகர் அய்யப்ப பட்டர், கோவில் மணியம் சுப்பையா மற்றும் பக்த ஜன சபையினர் செய்து வருகின்றனர்.

    • அதிகாலையில் கும்ப பூஜையை தொடர்ந்து கொடி பட்டம் திருவீதி உலா நடைபெற்றது.
    • விழா நாட்களில் தினசரி சப்பர பவனி, பக்தி சொற்பொழிவு, உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக நேற்று காலையில் மகா கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

    மாலையில் நால்வர் சுவாமிகளின் பல்லக்கு பவனி நடந்தது.இன்று அதிகாலையில் கும்ப பூஜையை தொடர்ந்து கொடி பட்டம் திருவீதி உலா நடைபெற்றது. இதன் நிறைவாக கொடியேற்றம் நடந்தது.ஆலய பூஜகர் அய்யப்ப பட்டர் மற்றும் சண்முக பட்டர் குழுவினர் வைபவங்களை நடத்தினர்.

    நிகழ்ச்சியில் கோவில் மணியம் சுப்பையா, பக்த ஜன சபை சார்பில் அரிகிருஷ்ணன், பூபால் ராஜன், தெரிசை அய்யப்பன், சுப்பிரமணியன், தவமணி, அமிர்தராஜ், சைவ சித்தாந்தக் கழக தலைவர் சங்கரலிங்கம், பொருளாளர் கற்பகவிநாயகம், அரிமா சங்க தலைவர் நடராஜன் மற்றும் திருமுறை பன்னிசை குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் இன்று மாலை திருநாவுக்கரசர் உழவாரபணி திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து ஸ்ரீபெலி நாயகர் அஸ்திர தேவருடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளல் நடக்கிறது. நாளை 2-வது நாள் திருவிழாவில் காலையில் யாகசாலை பூஜையும், சுவாமி அம்பாள் சப்பர பவனியும் நடக்கின்றன. மாலையில் விசேஷ அலங்கார பூஜையும் சப்பரபவனியும் நடக்கின்றன.

    இதேபோல் விழா நாட்களில் தினசரி காலையிலும் மாலையிலும் சப்பர பவனி, பக்தி சொற்பொழிவு, இன்னிசை, மாறுவேடப் போட்டி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

    7-ஆம் திருநாளான ஜூலை 2-ந் தேதி மாலை சிவப்பு சாத்தி சப்பர பவனியும், 8-வது நாள் காலையில் வெள்ளை சாத்தியும் மாலையில் பச்சை சாத்தியும் சப்பர பவனி நடக்கிறது. 9-வது நாளில் பூஞ்சப்பர பவனியும் நிறைவு நாளான ஜூலை 5-ந் தேதி மாலையில் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது.

    ×